Saturday 24 November 2012

Shutter Island - திரை விமர்சனம்


மிஸ்டரி த்ரில்லர் வகையை சேர்ந்த இந்த திரைப்படத்தை  Martin Scorsese இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில்  Leonardo DiCaprio ( Teddy Daniels)  , Mark Ruffalo (Chuck Aule) , Ben Kingsley (Dr. Cawley) மற்றும் பலர் நடித்துள்ளனர். Martin Scorsese படம் என்றாலே ஒரு ஏதிர்பார்ப்பு கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் ஒரு வெற்றி படத்தை மிக அற்புதமாக இயக்கிய அவருக்கு ஒரு சலாம் போடலாம். IMDB டாப் 250 யில் 234 வது இடத்தையும் ஏராளமான  விருதுகளையும் அள்ளியுள்ளது இந்த படம்.

நம்ம டைரக்டர் Martin Scorsese இந்த படத்திற்காக ஆஸ்கார்( Best Achievement in direction) வென்றுள்ளார். அதுமட்டுமல்ல 10 முறை ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர்   இயக்கிய  சில  முக்கிய  திரைப்படங்கள் Taxi Driver, Good Fellas , The Departed , Hugo , The Gangs of New York  etc. அவர் இயக்கிய The Last Temptation of Christ என்ற திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இவருக்கு ஆஸ்கார் கிடைக்காமல் போனதிற்கு அந்த திரைப்படம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும் அந்த திரைப்படத்திற்காக(The Last Temptation of Christ)  சிறந்த இயக்குனர் பிரிவில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்து நம்ம டைட்டானிக் ஹீரோ பத்தி பாக்கலாம். சிறு சிறு வேடங்களில் நடித்து துணை நடிகராக வளர்ந்து  இப்பொழுது ஹாலிவுட் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் அதிக சம்பளம் வாங்கும்  விரல் விட்டு என்ன கூடிய ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஒரு படத்திற்கு சுமார் 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவரது புகழ் பெற்ற சில திரைப்படங்கள் Titanic, Gangs of New York , Blood diamond, Inception , Catch Me If You Can etc. 3 முறை ஆஸ்காருக்கு பரிந்த்துரைக்கபட்டுள்ளார்.
Ben Kingsley, Gandhi திரைப்படத்தில் காந்தியாக நடித்து ஆஸ்கார் வென்றவர். அதுமட்டுமின்றி 4 முறை ஆஸ்காருக்கு பரிந்த்துரைக்கபட்டவர். அவர் நடித்த சில முக்கிய திரைப்படங்கள் Schindler’s List , Hugo etc. The Avengers படத்தை அனைவரும் பார்த்திருப்பீங்க. அதில Hulk ரோலில் நடித்திருப்பவர் தான் Mark Ruffalo. முன்னுரை முடிஞ்சாச்சு. இப்போ திரைப்படத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.

Martin Scorsese , ஹாலிவூடில் உள்ள மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். இந்த திரைப்படம் அதற்கு ஒரு சான்று. ஒரு மெல்லிய கதைக்கு இப்படியும் திரைக்கதை பண்ண முடியுமா? ஆச்சரியப்படவைக்கும் அளவிற்கு புத்திசாலித்தனம். திரைக்கதைக்கு  ஏற்ற லொகேஷன் , கதாபாத்திர தேர்வு , ஒளிப்பதிவு, பின்னணி இசை இப்படி அனைத்துமே அருமையாக அமைந்திருக்கிறது இந்த திரைபடத்தில். கதைக்கு வருவோம். 1950 களில் நடக்கும் கதை. ஷட்டர் ஐலேன்ட் என்பது ஒரு தீவு, அதில் சமுதாயத்திற்கு பாதிப்பு விளைவிக்கும் மனநிலம் பாதிக்கப்பட்ட கைதிகள் இருக்கும் மருத்துவமனை சிறைசாலை உள்ளது. இதில் வார்டு A, B & C என்று 3 கட்டிடங்கள் உள்ளது. இந்த தீவிற்கு படகுகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும். வேறு வழி கிடையாது.

 அமெரிக்க மார்ஷல்ஸ் ஆன டெடி( Teddy) மற்றும் அவன் நண்பன் சக்(Chuck)கும் ஒரு விசாரணைக்காக செல்கின்றனர். காரணம் ரேச்சல்(Rachel) என்ற ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட கைதி காணாமல் போகிறாள். அவள் தன் பிள்ளைகளை ஏரியில் தள்ளி கொன்று விடுகிறாள். அவளை தேடி கண்டுபிடிக்க இந்த இருவரும் அங்கு செல்கின்றனர். மிகுந்த பாதுகாப்பாக உள்ள இடம்.  விசாரணையில் அங்கு வேலை செய்யும் நர்ஸ் மற்றும் டாக்டர்கள் தக்க ஒத்துழைப்பு அளிக்க மறுகின்றனர். அங்கு உள்ள வார்டு A, B அண்ட் C  யில் தேடி பார்க்க அனுமதி கேட்கிறான், ஆனால் அவர்கள் வார்டு C க்கு செல்ல அனுமதி இல்லை என்றும் ஏற்கனவே  லைட் ஹவுஸ்-ஐ தேடிவிட்டதாகவும் சொல்கின்றனர். சரியான  ஒத்துழைப்பு  இல்லாததால்  திரும்பி செல்ல முடிவு செய்கிறான் டெடி.  இதற்கு இடையில் அவனுக்கு அடிக்கடி ஒற்றை தலைவலி வருகிறது. அப்படி வரும் சமயங்களில் இறந்து போன அவன் மனைவி அவன் கனவில் தோன்றுகிறாள் காணாமல் போன ரேச்சல் கிடைத்து விட்டதாகவும் கேஸ் முடிந்து விட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால் டெடி-க்கு அவள் உண்மையான ரேச்சல் இல்லை என்று சந்தேகம் எழுகிறது. பலத்த புயல் காரணமாக அங்கு தங்கும்படி நேர்கிறது.

டெடி , சக் இடம்  தன் மனைவி வீட்டில் இருக்கும் பொது, ஒருவன் வேண்டும் என்றே வீட்டுக்கு தீ வைத்ததால் அவள் இறந்து விட்டதாகவும், கனவில் அவள் தோன்றி ,அவன் இங்கு இருப்பதாக சொல்கிறான். பலத்த மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கபட்டு வார்டு c திறந்துகொள்கிறது. யாருக்கும் தெரியாமல் அவன் தன் மனைவியை கொலை செய்தவனை பார்க்க செல்கிறான். அங்கு ஏதிர்பார்காமல் தன் நண்பனை சந்திக்கிறான். அவன் அனைவரும் இங்குள்ள கைதிகள் மேல் சில மருத்துவ பரிசோதனைக்காக பயன்படுத்துகிறார்கள்  என்றும், பின்னர் அவர்களை அங்குள்ள லைட் ஹவுஸ்க்கு கொண்டு சென்று அவர்கள் தலையில் அறுவை சிகிச்சை (lobotomy) செய்கிறார்கள் என்றும் கூறுகிறான். அவனை இந்த இடத்தை விட்டு செல்ல விடமாடார்கள் என்றும் அவன் நண்பனையும் கூட நம்ப வேண்டாம் என்றும் சொல்கிறான்.

பின்னர் அந்த லைட் ஹவுஸ்க்கு ரகசியமாக சக்-குடன்  என்ன உள்ளது என்று பார்க்க செல்கிறான். வழியில் தன் நண்பன் சொன்னது  நினைவில் வர, சந்தேகப்பட்டு, சக்- கை அங்கேயே இருக்குபடி கூறி விட்டு தனியாக செல்கிறான். இருட்டி விட ஆரம்பிப்பதாலும் பாறைகள் அதிகமாக உள்ளதாலும், திரும்பி வருகிறான். ஆனால் வந்து பார்க்கும் போது அவன் நண்பன் காணமல் போகிறான் . அவனை தேடும் போது, ஒரு குகையில் உண்மையான ரேச்சல்-லை சந்திக்கிறான். அவள் தான் ஒரு டாக்டர் என்றும், இந்த பரிசோதனைகளை நிறுத்த சொன்னதிற்காக அவளை வீண் மீது பழி சுமத்தி அடைத்து வைத்திருப்பதாகவும் அவளுக்கு கல்யாணம் ஆகவில்லை, குழந்தைகளும் இல்லை என்றும் கூறுகிறாள். மேலும் அவனை இந்த தீவை விட்டு வெளியே செல்ல விடமாடார்கள் என்றும் ஏப்படியாவது தப்பித்து செல்ல கூறுகிறாள்.
திரும்பி வரும் அவன், டாக்டரிடம்  தன் நண்பன் காணாமல் போனதை பற்றி கூறுகிறான். ஆனால் அவரோ இங்கு வரும் போது டெடி தனியாக தான் வந்ததாகவும் அவனுடன் யாரும் வரவில்லை என்று கூறுகின்றனர்.  இதற்கிடையில் அவனுக்கு ஒற்றை தலைவலி வந்து அவன் மனைவி கனவில் வந்து அவனுக்கு மிகுந்த மன அழுத்தத்தை கொடுக்கிறாள். அந்த இடத்தை விட்டு தப்பி செல்லும் படியும் கூறுகிறாள். ஆனால் அவன் நண்பன் காணவில்லை என்பதால், அவனை தேடி லைட் ஹவுஸ்க்கு செல்கிறான். அவன் நண்பன் கிடைத்தானா? அவன் மனைவியை தீ வைத்து கொன்றவனை பழி வாங்கினானா? உண்மையில் அங்கு என்ன தான் நடக்கிறது? அந்த இடத்தை விட்டு டெடி தப்பித்தானா? இப்படி எண்ணற்ற பல கேள்விகளுக்கு விடை அளித்ததோடு மட்டும் அல்லாமல் ஒரு ஏதிர்பாராத திருப்புமுனையோடு முடிகிறது திரைப்படம்.

டெடிக்கு வரும் ஒற்றை தலைவலியின் போது அவனுக்கு தோன்றும் காட்சிகளை மிக அழகாக எடுத்திருப்பார்கள்  அவனுக்கு இறந்து போன அவனின் மனைவி கனவில் தோன்றும் போது அவளை கட்டி பிடிக்கும் போது, அவள் ஒரு paper போல எறிந்து சாம்பல் ஆகிவிடுவாள். அதுமட்டுமின்றி அவன் கனவில் சில போர் காட்சிகளும் தோன்றும். ஒரு காட்சியில் ரேச்சல் மற்றும் ஒரு சிறு பெண் தோன்றுவாள். அனைத்தும் கருப்பு வெள்ளையாக இருக்கும், ஆனால் ரேச்சல் மற்றும் அந்த சிறுமி மட்டும் சிவப்பு நிறத்தில் தோன்றுவார்கள். அவர்களை சுற்றி பணிகட்டியில் உறைந்து போன பிணங்கள்.,தன்னை ஏன் காப்பாற்றவில்லை என்று கேட்கும்  அந்த சிறுமி, இப்படி அவன் கனவு காட்சிகள் அனைத்தும் பயங்கரமாக இருக்கும். கனவு காட்சிகளுக்கும் நிஜமான காட்சிகளுக்கும் ஒரு வித்தியாசத்தை நம்மால் உணர முடியும்.

படத்தின் ஒரு மிக பெரிய பிளஸ் , படத்தின் ஒளிப்பதிவு. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் Robert Richardson .7 முறை ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு 3 முறை விருதுகளையும் வென்றுள்ளார். அட்டகாசமான ஒளிப்பதிவு. நம்மால் எது  நிஜம் எது கனவு என்று பிரித்து பார்க்க முடியும். படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை அபாரமான ஒளிப்பதிவு.
படம் பார்க்கும்  இரண்டு மணி நிறம் போவதே தெரியாது. விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் பின்னணி இசை நம்மை ஷட்டர் ஐலேன்ட்-க்கே அழைத்து சென்று விடும். கண்டிப்பாக ஒரு நல்ல த்ரில்லர் படம். நிறைய திருப்பங்களோடு மிக சுவாரசியமான இந்த திரைப்படத்தை மிஸ் பண்ணாம கண்டிப்பா பாருங்க.

Friday 21 September 2012

The Usual Suspects - திரை விமர்சனம்


மிஸ்டரி(Mystery)வகை திரைப்படங்களில் மிகச் சிறந்த படமான " The Usual Suspects " திரைப்படத்தை  Bryan Singer இயக்கியுள்ளார். முக்கிய அம்சமான திரைக்கதையை Christopher McQuarrie எழுதியுள்ளார்,  Gabriel Byrne(Keaton), Kevin Spacey (Verbal Kint) , Chazz Palminteri ( Agent Kujan) மற்றும்  பலர் நடித்துள்ளனர். சிறந்த நடிகர்(Kevin Spacey) மற்றும் சிறந்த திரைக்கதைக்காக( Christopher McQuarrie) இரண்டு ஆஸ்கார் அவார்ட்ஸ் வென்றுள்ளது. IMDB டாப் 250-யில் 27 -வது இடத்தை பிடித்துள்ளது.


Kevin Spacey-க்கு இத்திரைப்படத்திற்காக முதல் ஆஸ்கர் கிடைத்தது. இரண்டாவது அவார்ட் American Beauty என்ற படத்திற்காக கிடைத்தது. அவருடைய மற்ற சில புகழ் பெற்ற படங்கள் L.A Confidential ,The Life of David Gale (நம்ம ஊரு விரும்மாண்டி படம்  இந்த படத்தோட தழுவல் ) , Se7en(அவருடைய நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்).
இந்தப்படத்தை நாம் மிக நுணுக்கமாக காட்சிகளை கவனித்தால் கூட நம்மால் முடிவு என்ன என்பதை கணிக்கவே முடியாது. அதிர்ச்சியான அந்த முடிவை தெரிந்த பிறகு, நமக்கு படத்தை rewind பண்ணி பார்க்கலாம் என்று தோன்றும். படம் முழுவதும் மிஸ்டரி முடிச்சுகள் தான்.படத்துடன் சேர்ந்து நாமும் மிக வேகமாக பயணிப்போம்.


படத்தொகுப்பாளர் மிக அருமையாக படத்தினை தொகுத்து இருப்பார். சில காட்சிகள் நமக்கு குழப்பமாகவே இருக்கும் முடிவு தெரியும் வரையில். பல தடவை இந்த படத்தை நான் பார்த்து இருந்தாலும், எப்போது பார்த்தாலும் என்னை இந்த படம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். மிக அருமையாக  திரைக்கதை அமைக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.


இந்த படத்தில் கதை என்று ஒன்றுமே கிடையாது. படத்தின் முழு பலம் மிக அருமையான புதுமையான திரைக்கதை மட்டுமே. நடந்த  ஒரு சம்பவத்தை பற்றி வெர்பல்(Kevin Spacey) என்பவன் பார்வையில் சொல்லப்படுகிறது, நம்ம ரஷோமான் படம் போல அவன்  கூறும் தொகுப்பே  இத்திரைப்படத்தின் கதை என்று கூட கூறலாம். கெவின் ஸ்பசெயின் நடிப்பு பிரமாதம். அவரது நடிப்புக்காகவே இந்தப்படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட ஐந்து பேரில் யார் குற்றவாளி என்பதை போலீஸ் கண்டுபிடித்தாதா? என்பது தான் கதை.


சரி அந்த ஸ்மார்டான கதை என்ன என்ற பார்ப்போம். படத்தின் முதல் காட்சியில் முகம் தெரியாத கெய்செர்(Keyser) என்பவன் கீட்டனை(Keaton) சுடுகிறான். அத்தோடு அங்கு இருக்கும் வெடிமருந்துகளுக்கு தீ வைத்து செல்கிறான். இதனால் அந்த இடம் முற்றிலும் வெடித்து சிதறுகிறது. மறு நாள் போலீஸ் அந்த இடத்திற்கு செல்லும் பொது தான் நமக்கு தெரிகிறது வெடித்தது கப்பல் என்று. இந்த கேசை விசாரிக்க ஏஜென்ட் Kujan என்பவன் நியமிக்க படுகிறான். இந்த சம்பவத்தில் அனைவரும் உயிர் இழக்கிறார்கள் இரண்டு பேரை தவிர. ஒன்று வெர்பல் கின்ட் ( Verbal Kint) என்பவன் மற்றொருவன் ஒரு ஹங்கேரிய கிரிமினல். பலத்த தீ காயம் அடைந்த அவனை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை  அளிக்கிறார்கள். வெர்பலை போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்கும் போது தனக்கு ஒன்றும் நேராமல் பார்த்துக்கொண்டால் நடந்ததை கூறுவதாக சொல்கிறான் , நடந்ததை எழுதியும் கொடுக்கிறான்..ஆனாலும் Kujan அவன் வாயால் நடந்ததை முழுவதுமாக கூறுமாறு வலியுறுத்துகிறான்.சம்பவம் நடந்த நாளில் இருந்து ஐந்து வாரம் முன்னர் என்னென்ன நடந்தது என்று கூற ஆரம்பிக்கிறான். படத்தில் வெர்பல் கூறும் flashback மற்றும் நிகழ்காலத்தில் நடப்பவை மாறி மாறி வரும்.


Kaeton, McManus, Fenster , Hovkney மற்றும் Verbal (கால் சற்று ஊனம் )ஆகிய ஐந்து கிரிமினல்களை ஒரு ஆயுதம்  கடத்தல் கேசுக்காக ஒரே செல்லில் விசாரணைக்காக  வைக்கிறார்கள். ஜெயில்  செல்லில் இருக்கும் போது McManus மற்றவர்களை சம்மதிக்க வைத்து கடத்தல்காரர்களிடம்  இருந்து போதை பொருட்களை  கொள்ளை  அடிக்க திட்டம் தீட்டுகிறான். வெற்றிகரமாக ஐவரும் சேர்ந்து கொள்ளையும் அடிகிறார்கள். கொள்ளை அடித்த பொருட்களை ரெட்ப்பூட்(RedFoot) என்பவனிடம்  விற்க Los angeles நகருக்கு ஐந்து பேரும் செல்கிறார்கள். அங்கு ரெட்ப்பூட் வேறொரு வேலை இருப்பதாகவும் வைர வியாபாரியிடம் இருந்து கொள்ளை அடிக்க வேண்டும் என்று சொல்கிறான். சரி என்று கொள்ளை அடிக்க போகும் அவர்கள் வியாபாரியை கொன்று விட்டு பெட்டியை பார்க்கும் பொது போதை பொருள் இருக்குமே தவிர நகையோ பணமோ இருக்காது. கோபத்தோடு ரெட்ப்பூட்டை பார்க்க செல்லும் அவர்களிடம்  தனக்கு இந்த வேலை ஒரு lawyer கோபயாஷி என்பவன் மூலமாக வந்ததாகவும் அவனை சந்தித்ததில்லை என்றும், கோபயாஷி இவர்களை சந்திக்க விரும்புவதாகவும் கூறுகிறான். அவனை சந்திக்க இவர்களும் ஒப்புகொள்கின்றனர்.



கோபயாஷி அவர்களை சந்தித்து , அவனுடைய பாஸ் கெய்செர் அனுப்பியதாக கூறுகின்றான். ஐவரும் அவர்களுக்கே தெரியாமல் கெய்செர்ருடைய பொருட்களை கொள்ளை அடித்துள்ளதாகவும் அதற்க்கு கைமாறாக , ஒரு வேலை செய்ய வேண்டும் என்று கூறுகின்றான். அது என்ன என்றால்  ஒரு கப்பலில் கெய்செரின் விரோதிகள் 91 மில்லியன் டாலர்ஸ் மத்திபுள்ள போதை பொருட்களை  வைத்துள்ளதாகவும் . அந்த போதை பொருட்களை  அழிக்க வேண்டும் என்பதே . விரும்பினால் அந்த போதை பொருட்களை வாங்கவருபவர்களிடம் இருந்து 91 மில்லியன் டாலர்ஸ் பணத்தை கொள்ளை அடித்து  கொள்ளலாம் என்று கூறி விட்டு செல்கிறான்.


அன்று இரவு தப்பித்து செல்ல முயலும் 5-ல் ஒருவனான் பின்ச்டேரை(Fenster) சுட்டு கொன்று விடுகிறார்கள் கெய்செர் ஆட்கள்.. கோபயாஷியை பழி வாங்க அவனிடத்திற்கு சென்று லிப்டில் அவனுடன் வரும் இரண்டு பேரையும் கொன்று அவனை பிடித்து வருகிறார்கள்.  பின்ச்டேரை கொலை செய்ததிற்காக  அவனை சுட போகும் பொது, கீட்டனின் மனைவி  ஒரு மீட்டிங்காக இங்கு வந்திருப்பதாகவும், அவனை கொன்றால் அவளையும் கொன்று விடுவதாக கூறுகிறான் கோபயாஷி. மேலும் அந்த நான்கு பேரின் நெருக்கமானவர்கள் பேரை கூறி இந்த வேலையை செய்யாவிட்டால் அனைவரையும் கொன்று விடுவதாக கூறுகிறான். வேறு வழியன்றி கப்பலில் உள்ள போதை பொருட்களை தேடி நான்கு பேரும் செல்கின்றனர்.


அப்பொழுது கீட்டன், வெர்பலிடம் இடம் அவனை அவர்களுடன் வரவேண்டாம் என்றும் ஒரு வேலை அவனுக்கு ஏதாவது நடந்தால் அவன் மனைவிக்கு நடந்ததை கூறவும் அந்த பணத்தை அவளிடம் ஒப்படைக்கவும் சொல்கிறான்.
போதை பொருட்களை தேடி செல்லும்  அவர்கள் கெய்செரிடம் மாட்டி கொண்டதாகவும் கெய்செர், கீட்டனை சுட்டதை பார்த்ததாகவும் கூறகின்றான். கெய்செர் இங்கு வந்து தன்னை கொலை செய்வான் என்றும் கூறுகிறான் வெர்பல். இதற்கிடையில் மருத்துவமனையில் உள்ளவன் அந்த கப்பலில் போதை பொருட்கள் இல்லை என்றும் கெய்செரை பார்த்ததாகவும் அவன் முக அடையாளங்களை கூற, ஒரு போலீஸ் அதிகாரி அவன் உருவத்தை வரைய ஆரம்பிக்கிறான். அந்த புகைப்படத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைகிறார்கள்.


உண்மையில் கெய்செர் யார்? வெர்பல் கூறியது போல அனைவரும் அந்த  கப்பலில் இறந்து விட்டார்களா? உண்மையில் கீட்டன் இறந்து விட்டானா? கப்பலில் போதை பொருட்கள் இல்லை என்றால் எதற்காக அவர்களை கப்பலுக்கு கொள்ளை அடிக்க சொல்கிறான் கெய்செர்? நீங்கள் சற்றும் எதிர்பார்காத திருப்பங்களுடன் மிக மிக சுவாரசியமான கிளைமாக்ஸ் பாருங்கள். அசந்துவிடுவீர்கள்.

வெர்பல் , கெய்செர் பற்றி கூறும் ஒரு சின்ன பிளாஷ்பாக்கில் The greatest trick the Devil ever pulled was convincing the world he didn't exist” என்று கூறுவான். இந்த வரிகள் கிளைமாக்ஸ் காட்சியில் sync ஆகும் போது நம்மிடம் கைத்தட்டல் வாங்கிவிடும்.


படத்தில் ஒரு காட்சியில் ஐவரையும் ஒரு வரிசையில் நிற்க வைத்து ஒரு டயலாக்கை சொல்ல சொல்வார்கள். ஐந்து பேரும் ஒவ்வொரு விதமாக சொல்வார்கள். சொல்லும் விதமே சிரிப்பை வரவைத்து விடும். ஆனால் ஒரிஜினலாக  இந்த காட்சியை சீரியஸ் காட்சியாக எடுக்க முடிவுசெய்தார்களாம். பல டேக் எடுத்தும் சரியாக வராததால் காமெடி காட்சியாக மாற்றி விட்டார் இயக்குனர்.


படத்தில் வெர்பலை விசாரிக்கும் போது அவன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் எப்படி உண்மையை வாங்க வேண்டும்  என்று தெரியும் என்று Kujan கூறிவிட்டு 3 குற்றவாளிகளை ஒரே  செல்லில் இரவு அடைத்து வைத்தால் விடிந்ததும் கொலை செய்தவனை கண்டுபிடிக்க முடியும் என்று அவன் கூறும் விளக்கம் அருமை.


படத்தில் முதல் 20 நிமிடங்கள் சற்று பொறுமையாக போகும். கதைக்குள் நுழைந்துவிட்டால் விறுவிறுப்பு தொற்றிக்கொள்ளும். நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ், தெளிவான அதே சமயம் சுவாரசியமான திரைக்கதை , கதையில் வரும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு எல்லாமே புதுமை. மிஸ் பண்ணாம பாருங்க. ஒரு நல்ல அனுபவமா இருக்கும் இந்த திரைப்படம்.