Friday 21 September 2012

The Usual Suspects - திரை விமர்சனம்


மிஸ்டரி(Mystery)வகை திரைப்படங்களில் மிகச் சிறந்த படமான " The Usual Suspects " திரைப்படத்தை  Bryan Singer இயக்கியுள்ளார். முக்கிய அம்சமான திரைக்கதையை Christopher McQuarrie எழுதியுள்ளார்,  Gabriel Byrne(Keaton), Kevin Spacey (Verbal Kint) , Chazz Palminteri ( Agent Kujan) மற்றும்  பலர் நடித்துள்ளனர். சிறந்த நடிகர்(Kevin Spacey) மற்றும் சிறந்த திரைக்கதைக்காக( Christopher McQuarrie) இரண்டு ஆஸ்கார் அவார்ட்ஸ் வென்றுள்ளது. IMDB டாப் 250-யில் 27 -வது இடத்தை பிடித்துள்ளது.


Kevin Spacey-க்கு இத்திரைப்படத்திற்காக முதல் ஆஸ்கர் கிடைத்தது. இரண்டாவது அவார்ட் American Beauty என்ற படத்திற்காக கிடைத்தது. அவருடைய மற்ற சில புகழ் பெற்ற படங்கள் L.A Confidential ,The Life of David Gale (நம்ம ஊரு விரும்மாண்டி படம்  இந்த படத்தோட தழுவல் ) , Se7en(அவருடைய நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்).
இந்தப்படத்தை நாம் மிக நுணுக்கமாக காட்சிகளை கவனித்தால் கூட நம்மால் முடிவு என்ன என்பதை கணிக்கவே முடியாது. அதிர்ச்சியான அந்த முடிவை தெரிந்த பிறகு, நமக்கு படத்தை rewind பண்ணி பார்க்கலாம் என்று தோன்றும். படம் முழுவதும் மிஸ்டரி முடிச்சுகள் தான்.படத்துடன் சேர்ந்து நாமும் மிக வேகமாக பயணிப்போம்.


படத்தொகுப்பாளர் மிக அருமையாக படத்தினை தொகுத்து இருப்பார். சில காட்சிகள் நமக்கு குழப்பமாகவே இருக்கும் முடிவு தெரியும் வரையில். பல தடவை இந்த படத்தை நான் பார்த்து இருந்தாலும், எப்போது பார்த்தாலும் என்னை இந்த படம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். மிக அருமையாக  திரைக்கதை அமைக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.


இந்த படத்தில் கதை என்று ஒன்றுமே கிடையாது. படத்தின் முழு பலம் மிக அருமையான புதுமையான திரைக்கதை மட்டுமே. நடந்த  ஒரு சம்பவத்தை பற்றி வெர்பல்(Kevin Spacey) என்பவன் பார்வையில் சொல்லப்படுகிறது, நம்ம ரஷோமான் படம் போல அவன்  கூறும் தொகுப்பே  இத்திரைப்படத்தின் கதை என்று கூட கூறலாம். கெவின் ஸ்பசெயின் நடிப்பு பிரமாதம். அவரது நடிப்புக்காகவே இந்தப்படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட ஐந்து பேரில் யார் குற்றவாளி என்பதை போலீஸ் கண்டுபிடித்தாதா? என்பது தான் கதை.


சரி அந்த ஸ்மார்டான கதை என்ன என்ற பார்ப்போம். படத்தின் முதல் காட்சியில் முகம் தெரியாத கெய்செர்(Keyser) என்பவன் கீட்டனை(Keaton) சுடுகிறான். அத்தோடு அங்கு இருக்கும் வெடிமருந்துகளுக்கு தீ வைத்து செல்கிறான். இதனால் அந்த இடம் முற்றிலும் வெடித்து சிதறுகிறது. மறு நாள் போலீஸ் அந்த இடத்திற்கு செல்லும் பொது தான் நமக்கு தெரிகிறது வெடித்தது கப்பல் என்று. இந்த கேசை விசாரிக்க ஏஜென்ட் Kujan என்பவன் நியமிக்க படுகிறான். இந்த சம்பவத்தில் அனைவரும் உயிர் இழக்கிறார்கள் இரண்டு பேரை தவிர. ஒன்று வெர்பல் கின்ட் ( Verbal Kint) என்பவன் மற்றொருவன் ஒரு ஹங்கேரிய கிரிமினல். பலத்த தீ காயம் அடைந்த அவனை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை  அளிக்கிறார்கள். வெர்பலை போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்கும் போது தனக்கு ஒன்றும் நேராமல் பார்த்துக்கொண்டால் நடந்ததை கூறுவதாக சொல்கிறான் , நடந்ததை எழுதியும் கொடுக்கிறான்..ஆனாலும் Kujan அவன் வாயால் நடந்ததை முழுவதுமாக கூறுமாறு வலியுறுத்துகிறான்.சம்பவம் நடந்த நாளில் இருந்து ஐந்து வாரம் முன்னர் என்னென்ன நடந்தது என்று கூற ஆரம்பிக்கிறான். படத்தில் வெர்பல் கூறும் flashback மற்றும் நிகழ்காலத்தில் நடப்பவை மாறி மாறி வரும்.


Kaeton, McManus, Fenster , Hovkney மற்றும் Verbal (கால் சற்று ஊனம் )ஆகிய ஐந்து கிரிமினல்களை ஒரு ஆயுதம்  கடத்தல் கேசுக்காக ஒரே செல்லில் விசாரணைக்காக  வைக்கிறார்கள். ஜெயில்  செல்லில் இருக்கும் போது McManus மற்றவர்களை சம்மதிக்க வைத்து கடத்தல்காரர்களிடம்  இருந்து போதை பொருட்களை  கொள்ளை  அடிக்க திட்டம் தீட்டுகிறான். வெற்றிகரமாக ஐவரும் சேர்ந்து கொள்ளையும் அடிகிறார்கள். கொள்ளை அடித்த பொருட்களை ரெட்ப்பூட்(RedFoot) என்பவனிடம்  விற்க Los angeles நகருக்கு ஐந்து பேரும் செல்கிறார்கள். அங்கு ரெட்ப்பூட் வேறொரு வேலை இருப்பதாகவும் வைர வியாபாரியிடம் இருந்து கொள்ளை அடிக்க வேண்டும் என்று சொல்கிறான். சரி என்று கொள்ளை அடிக்க போகும் அவர்கள் வியாபாரியை கொன்று விட்டு பெட்டியை பார்க்கும் பொது போதை பொருள் இருக்குமே தவிர நகையோ பணமோ இருக்காது. கோபத்தோடு ரெட்ப்பூட்டை பார்க்க செல்லும் அவர்களிடம்  தனக்கு இந்த வேலை ஒரு lawyer கோபயாஷி என்பவன் மூலமாக வந்ததாகவும் அவனை சந்தித்ததில்லை என்றும், கோபயாஷி இவர்களை சந்திக்க விரும்புவதாகவும் கூறுகிறான். அவனை சந்திக்க இவர்களும் ஒப்புகொள்கின்றனர்.



கோபயாஷி அவர்களை சந்தித்து , அவனுடைய பாஸ் கெய்செர் அனுப்பியதாக கூறுகின்றான். ஐவரும் அவர்களுக்கே தெரியாமல் கெய்செர்ருடைய பொருட்களை கொள்ளை அடித்துள்ளதாகவும் அதற்க்கு கைமாறாக , ஒரு வேலை செய்ய வேண்டும் என்று கூறுகின்றான். அது என்ன என்றால்  ஒரு கப்பலில் கெய்செரின் விரோதிகள் 91 மில்லியன் டாலர்ஸ் மத்திபுள்ள போதை பொருட்களை  வைத்துள்ளதாகவும் . அந்த போதை பொருட்களை  அழிக்க வேண்டும் என்பதே . விரும்பினால் அந்த போதை பொருட்களை வாங்கவருபவர்களிடம் இருந்து 91 மில்லியன் டாலர்ஸ் பணத்தை கொள்ளை அடித்து  கொள்ளலாம் என்று கூறி விட்டு செல்கிறான்.


அன்று இரவு தப்பித்து செல்ல முயலும் 5-ல் ஒருவனான் பின்ச்டேரை(Fenster) சுட்டு கொன்று விடுகிறார்கள் கெய்செர் ஆட்கள்.. கோபயாஷியை பழி வாங்க அவனிடத்திற்கு சென்று லிப்டில் அவனுடன் வரும் இரண்டு பேரையும் கொன்று அவனை பிடித்து வருகிறார்கள்.  பின்ச்டேரை கொலை செய்ததிற்காக  அவனை சுட போகும் பொது, கீட்டனின் மனைவி  ஒரு மீட்டிங்காக இங்கு வந்திருப்பதாகவும், அவனை கொன்றால் அவளையும் கொன்று விடுவதாக கூறுகிறான் கோபயாஷி. மேலும் அந்த நான்கு பேரின் நெருக்கமானவர்கள் பேரை கூறி இந்த வேலையை செய்யாவிட்டால் அனைவரையும் கொன்று விடுவதாக கூறுகிறான். வேறு வழியன்றி கப்பலில் உள்ள போதை பொருட்களை தேடி நான்கு பேரும் செல்கின்றனர்.


அப்பொழுது கீட்டன், வெர்பலிடம் இடம் அவனை அவர்களுடன் வரவேண்டாம் என்றும் ஒரு வேலை அவனுக்கு ஏதாவது நடந்தால் அவன் மனைவிக்கு நடந்ததை கூறவும் அந்த பணத்தை அவளிடம் ஒப்படைக்கவும் சொல்கிறான்.
போதை பொருட்களை தேடி செல்லும்  அவர்கள் கெய்செரிடம் மாட்டி கொண்டதாகவும் கெய்செர், கீட்டனை சுட்டதை பார்த்ததாகவும் கூறகின்றான். கெய்செர் இங்கு வந்து தன்னை கொலை செய்வான் என்றும் கூறுகிறான் வெர்பல். இதற்கிடையில் மருத்துவமனையில் உள்ளவன் அந்த கப்பலில் போதை பொருட்கள் இல்லை என்றும் கெய்செரை பார்த்ததாகவும் அவன் முக அடையாளங்களை கூற, ஒரு போலீஸ் அதிகாரி அவன் உருவத்தை வரைய ஆரம்பிக்கிறான். அந்த புகைப்படத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைகிறார்கள்.


உண்மையில் கெய்செர் யார்? வெர்பல் கூறியது போல அனைவரும் அந்த  கப்பலில் இறந்து விட்டார்களா? உண்மையில் கீட்டன் இறந்து விட்டானா? கப்பலில் போதை பொருட்கள் இல்லை என்றால் எதற்காக அவர்களை கப்பலுக்கு கொள்ளை அடிக்க சொல்கிறான் கெய்செர்? நீங்கள் சற்றும் எதிர்பார்காத திருப்பங்களுடன் மிக மிக சுவாரசியமான கிளைமாக்ஸ் பாருங்கள். அசந்துவிடுவீர்கள்.

வெர்பல் , கெய்செர் பற்றி கூறும் ஒரு சின்ன பிளாஷ்பாக்கில் The greatest trick the Devil ever pulled was convincing the world he didn't exist” என்று கூறுவான். இந்த வரிகள் கிளைமாக்ஸ் காட்சியில் sync ஆகும் போது நம்மிடம் கைத்தட்டல் வாங்கிவிடும்.


படத்தில் ஒரு காட்சியில் ஐவரையும் ஒரு வரிசையில் நிற்க வைத்து ஒரு டயலாக்கை சொல்ல சொல்வார்கள். ஐந்து பேரும் ஒவ்வொரு விதமாக சொல்வார்கள். சொல்லும் விதமே சிரிப்பை வரவைத்து விடும். ஆனால் ஒரிஜினலாக  இந்த காட்சியை சீரியஸ் காட்சியாக எடுக்க முடிவுசெய்தார்களாம். பல டேக் எடுத்தும் சரியாக வராததால் காமெடி காட்சியாக மாற்றி விட்டார் இயக்குனர்.


படத்தில் வெர்பலை விசாரிக்கும் போது அவன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் எப்படி உண்மையை வாங்க வேண்டும்  என்று தெரியும் என்று Kujan கூறிவிட்டு 3 குற்றவாளிகளை ஒரே  செல்லில் இரவு அடைத்து வைத்தால் விடிந்ததும் கொலை செய்தவனை கண்டுபிடிக்க முடியும் என்று அவன் கூறும் விளக்கம் அருமை.


படத்தில் முதல் 20 நிமிடங்கள் சற்று பொறுமையாக போகும். கதைக்குள் நுழைந்துவிட்டால் விறுவிறுப்பு தொற்றிக்கொள்ளும். நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ், தெளிவான அதே சமயம் சுவாரசியமான திரைக்கதை , கதையில் வரும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு எல்லாமே புதுமை. மிஸ் பண்ணாம பாருங்க. ஒரு நல்ல அனுபவமா இருக்கும் இந்த திரைப்படம்.

19 comments:

  1. படம் ஏற்கனவே பார்த்த ஞாபகம், பெரும்பாலான காட்சிகள் மறந்து போச்சு தலைவா! மறுபடி பார்க்கலாம் தான். அந்த IMDb27வது மேட்டர் எனக்கு தெரியாது, தகவலுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  2. மீண்டும் ஒரு முறை பாருங்கள் கிஷோர்....
    வருகைக்கு நன்றி நண்பா...

    ReplyDelete
    Replies
    1. நானும் டவுன்லோட் பண்ணி
      பக்க ட்ரை பண்றேன்.
      பாதிக்கு மேல ஒன்னும் புரியறதில்லை.
      திரும்ப ஒரு தடவை concentrate பண்ணி பாக்கணும்

      Delete
    2. srt file டவுன்லோட் பண்ணி பாருங்க. கொஞ்சம் தெளிவா டயலாக் புரியும் நண்பா...

      Delete
  3. நிறைய தகவல்களை தந்து அருமையாக விமர்சனம் செய்து உள்ளீர்கள். நல்ல த்ரில்லர் படம். எனக்கு பிடித்த படமும் கூட. சஸ்பென்ஸ் உடைக்காமல் அழகாக சொல்லி உள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மிக சிறந்த த்ரில்லர் படம்..
      மிக்க நன்றி ராஜ்..

      Delete
  4. கெவின் ஸ்பேசி நடிப்பில் மிரட்டாமல் மிரட்டியிருப்பார்.one of the best 'twist ending' movies......good review for new watchers sir....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரியே.. அதனால் தான் ஆஸ்கார் வாங்கி இருக்கிறார்...
      வருகைக்கு நன்றி நண்பா ..

      Delete
  5. சில மாதங்களுக்கு முன்பு தான் படத்தைப் பார்த்தேன். மிக அருமையான த்ரில்லர். முடிவைத் தான் படம் போகும்போதே ஊகித்துவிட்டேன். அதனால் கொஞ்சம் த்ரில்லிங் மிஸ்ஸாகிடுச்சு. ஆனாலும் செமயான த்ரில்லர். அருமையான திரைக்கதை. நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய படங்களில் ஒன்று.

    நிறையத் தகவல்களுடன் விமர்சனம். அருமை. நன்றி. :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பா..
      நீங்கள் சொல்வது சரியே.... மிக சிறந்த த்ரில்லர் படம்..

      Delete
  6. தகவல்களோடு கூடிய விமர்சனம் கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா..

      Delete
  7. நல்ல திரைப்படம்,
    படம் பார்க்க ஆரம்பித்து முடிவு வரை மிகவும் கடுப்பான திரைப்படம்,... என்னடா படம் இப்படியே போகுது என்றும்.. இன்னும் ஐந்து நிமிசத்துல முடிய போகுது இன்னும் எந்த திருப்பமும் வரவில்லை என்று இருந்தேன். அந்த knock அவுத்தவுடன் தான் மொத்த படமே நம்மக்கு புரிய வரும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பரே,
      வருகைக்கு நன்றி.

      Delete
  8. பாஸ் என்ன ரொம்ப நாளா பதிவே காணம்...அடிக்கடி எழுதுங்க நண்பா..

    ReplyDelete
    Replies
    1. வேலை பளு நண்பா,
      இப்போ பரவயில்லை.
      இன்று புது பதிவு ஒன்று போட்டு இருக்கிறேன்.
      இனி வாரம் ஒரு பதிவு இடுகிறேன்.
      நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவிற்கு மிக்க நன்றி ராஜ்.

      Delete
  9. நண்பரே, உங்கள் தளம் மிக அருமை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆகச்சிறந்த படங்களின் விமர்சனங்கள் நல்ல சினிமாவை பார்க்க, சிலாகிக்க விரும்புவர்களுக்கு மிக அற்புதமான துவக்கத்தையும் அறிமுகத்தையும் அளிக்கிறது. ஒரே வீச்சில் தாங்கள் எழுதிய அனைத்து பதிவுகளையும் படித்துவிட்டேன். உங்களின் அக்கறையான பதிவுகள் படத்தை முன்பே பார்த்திருந்தாலும் திரும்பவும் பார்க்கத்துண்டுகிறது. நல்ல படங்களை தமிழில் பதிவு செய்யவேண்டும் என்ற உங்களின் ஆர்வத்துக்கும், உழைப்புக்கும் எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள். தொடந்து வாரம் ஒருமுறை ஒரு புதிய படத்தை எழுதினால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். அன்புடன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே உங்கள் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
      கண்டிப்பாக வாரம் ஒருமுறையேனும் பதிவு போடுகின்றேன்.

      Delete